காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவருக்கு கார்த்திகை மாத ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியாக அகத்திய மாமுனிவரும் அவரது மனைவி உலோப முத்திரையும் காட்சி தருகின்றனர்.
அகத்திய முனிவரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்தியருக்கும் உலோப முத்திரைக்கும் காலையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் பள்ளி மாணவ, மாணவியர் அகத்தியரின் 108 போற்றி பாடலை ஒன்றாக இணைந்து பாடினார்கள்.