காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அமைந்துள்ளது நாகம்மன் ஆலயம்.இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு வராஹி அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 29.8.25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தின் தொடர்ச்சியாக மண்டாலபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.
வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவையொட்டி காலையில் மூலவர் நாகம்மனுக்கு 108 சங்காபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
மாலையில் ஆலயத்திலிருந்து உற்சவர்கள் நாகம்மனும்,வராஹி அம்மனும் இணைந்தவாறு நாகவாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏற்பாடுகளை அமைப்பாளர் வ.வேணுகோபால்,ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் என்.மணிவண்ணன்,செயலாளர் பி.செந்தில் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon