காஞ்சிபுரம், அக்.17:
அத்திவரதர் புகழுக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில். இக்கோயிலில் மாதம் தோறும் நடைபெறும் ஏகாதசி நாட்களின் போது உற்சவர் வரதராஜசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஆலயத்தின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி வரை சென்று திரும்புவுது வழக்கம்.
இதே போல சுக்ரவார தினமான வெள்ளிக்கிழமை உற்சவர் பெருந்தேவித் தாயார் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தை வலம் வருவது வழக்கம்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇புரட்டாசி மாத ஏகாதசியும்,வெள்ளிக்கிழமையும் ஒரே நாளில் வந்ததையொட்டி வழக்கம் போல உற்சவர் வரதராஜசுவாமியும், பெருந்தேவித்தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon