Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பந்தல்கால் நடும் விழா


காஞ்சிபுரம், நவ.3:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் டிச.8ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி திங்கள்கிழமை அதிகாலையில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.




பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பர நாதர் சுவாமி கோயில்.இக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்காக ரூ.29 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் நிலையில் உள்ளன.


மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோயில் ராஜகோபுரம் முன்பாக பந்தல்கால் நடும் விழா அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது.


பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. 


இந்நிகழ்வில் உதவி ஆணையர்(பொறுப்பு) ரா.வான்மதி, செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன் மற்றும் கோயில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள், கோயில் திருவிழா உபயதாரர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.













Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.