காஞ்சிபுரம் | மார்ச் 29, 2026
அகத்தியர் - உலோபமுத்திரை வழிபாடு:
கிளார் கிராமத்தில் அகத்திய முனிவர் நேரில் வந்து வழிபாடு செய்ததாகக் கூறப்படும் இந்த ஆலயத்தில், அகத்திய முனிவர் மற்றும் அவரது மனைவி உலோபமுத்திரை ஆகியோருக்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, அகத்திய முனிவருக்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாணவர்களின் போற்றிப் பாராயணம்:
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, 108 மாணவர்கள் ஒன்றாக இணைந்து அகத்திய முனிவரின் 108 போற்றிப் பாடல்களை பக்திப் பரவசத்துடன் பாராயணம் செய்தனர். மாணவர்களின் இந்த கூட்டுப் பிரார்த்தனை அங்கிருந்த பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பக்தர்கள் தரிசனம்:
இந்த விசேஷ பூஜையில் கிளார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிளார் கிராம பொதுமக்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
.png)