காஞ்சிபுரம் | ஏப்ரல் 22, 2026
சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம்:
வைணவ ஆச்சாரியார்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த நட்சத்திரமான திருவாதிரை திருநாளையொட்டி, செவிலிமேடு கோயிலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று காலை பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்புத் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சுவாமிக்குத் தூய வெள்ளிக்கவச அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. ராமானுஜரின் இந்தச் சௌந்தர்யக் கோலத்தைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
அன்னப்பிரசாதம் வழங்கல்:
தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் தீர்த்த பிரசாதமும், அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யதாரர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தல வரலாறு:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குத் தினமும் தீர்த்தக் கைங்கர்யம் செய்வதற்காக ராமானுஜர் செவிலிமேடு கிணற்றிலிருந்தே நீர் எடுத்துச் சென்றார் என்பது இத்தலத்தின் வரலாற்றுச் சிறப்பாகும்.
செய்தியாளர் : E. ஜாபர், காஞ்சிபுரம் மாவட்டம்
