காஞ்சிபுரம் | ஜூன் 15, 2026
சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும்:
அமாவாசை திருநாளை முன்னிட்டு காலையிலிருந்தே ஆலயத்தில் ஆன்மீக வழிபாடுகள் தொடங்கின. அம்மனுக்கு உகந்த இந்த நன்னாளில், மூலவர் பொன்னியம்மனுக்குப் பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம்மனுக்குப் பட்டு உடுத்தி, வண்ண மலர்களால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்களைப் பரவசப்படுத்திய ஊஞ்சல் உற்சவம்:
விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் மாலை வேளையில் நடைபெற்றது. அப்போது, உற்சவர் பொன்னியம்மன் சர்வ அலங்கார பூஷிதமாய், நவரத்தினங்கள் இழைத்த ஆடை மற்றும் ஆபரணங்கள் சூடி, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார். மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, ஊஞ்சலில் ஆடியவாறு பொன்னியம்மன் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாகக் காட்சியளித்து அருள் பாலித்தார்.
மேஷம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன்கள்
அன்னதானமும் கிராம மக்கள் வழிபாடும்:
இந்த ஆன்மீக வைபவத்தை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் விழாவுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் சுவையான அன்னதானம் தாராளமாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் நாயக்கன்குப்பம் கிராம மக்கள் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு நீ நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
