Type Here to Get Search Results !

இன்று தீபாவளிக்கு வாங்கக்கூடாத பொருட்கள்

 



தீபாவளி அற்புத தினத்தில் நாம் பல்வேறு பொருட்களை வாங்க நினைப்போம். குறிப்பாக தான்தேராஸ் எனும் அற்புத நாளில் நாம் சில மங்களத்தைத் தரக்கூடிய பொருட்களை வாங்க வேண்டும் என்பது வழக்கமாக உள்ளது. அதே சமயம் இந்த நன்னாளில் வாங்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.



தங்கம், வெள்ளி

வண்ணத்தையும், வளத்தையும் வாரித்தரக்கூடிய தீபாவளி பண்டிகை இந்தாண்டு நவம்பர் 12 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை (ஐப்பசி 26) அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த அற்புத நாளில் தங்கம், வெள்ளி, புது துணி வாங்குவது நாம் வழக்கமாக பின்பற்றி வருகிறோம். அதைத் தாண்டி தற்போது வீட்டிற்கு தேவையான பெரிய செலவு செய்யக்கூடிய பொருளை இந்த பண்டிகையின் போது வாங்குவது வழ்க்கமாக வியாபாரிகள் நம் மன நிலையை மாற்றியுள்ளனர்.

*Advt

வாங்கக்கூடாதவை

தீபாவளி பண்டிகையின் போது நாம் எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

தீபாவளி, தந்தேராஸ் தினத்தில் நாம் விநாயகர், லட்சுமி தேவி மற்றும் குபேர வழிபாடு செய்வதோடு எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

தந்தேராஸ் தினத்தில் பிளாஸ்டிக், அலுமினிய பாத்திரங்கள், கத்திகள், கத்தரிக்கோல் போன்றவற்றை வாங்கக்கூடாது. அவ்வாறு செய்வது அசுபமாக கருதப்பட்டு வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும்.

தந்தேராஸ் தினத்தன்று, உணவு சமைப்பதற்கு இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம். இரும்பு தோசைக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை யாராவது வீட்டிற்கு கொண்டு வந்தால் அந்த நபருடன் வீட்டிற்கும் துரதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை.

கண்ணாடி தொடர்பான பொருட்கள்

தந்தேராஸ் நாளில், கண்ணாடி தொடர்பான பொருட்கள் மற்றும் கவரிங் நகைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கண்ணாடி ராகுவின் காரகம் ஆவார். அதனால் இந்த சுப தினத்தில் கண்ணாடி வாங்க வேண்டாம். கண்ணாடி வாங்குவதால் நம்முடைய முன்னேற்றம் தடைப்படலாம்.

தீபாவளி பண்டிகையின் முக்கிய அங்கமே புத்தாடைகள் வாங்கி பூஜை செய்து அணிவது தான். இந்த அற்புத தினத்தில் நாம் கருப்பு நிற ஆடைகளை வாங்கி பயன்படுத்துவதை நிச்சயம் தவிர்ப்பது அவசியம். அசுபத்தை உணர்த்தும் நிறம் கருமை என்பதால் அந்த நிற ஆடைகளை வாங்குவதைத் தவிர்க்கவும்.



தீப விளக்கு

தந்தேராஸ் அன்று களிமண்ணால் செய்யப்பட்ட தீப விளக்குகளை வாங்கி பயன்படுத்தலாம். தீபாவளி அன்று களி மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷமானது. ஆனால் களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களை வாங்க வேண்டாம். இதனால் உங்கள் வீட்டில் பாக்கியங்கள் குறைவதோடு, மகிழ்ச்சியும் அமைதியும் குறையும் என்பது நம்பிக்கை. தீபாவளிக்குப் பின்னர் நீங்கள் மண் பாண்ட பொருட்களை வாங்கி அதைப் பயன்படுத்தலாம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.