Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி – 108 பால்குடம் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது


 காஞ்சிபுரம், ஜூலை 18:

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்திபூர்வமான 108 பால்குடம் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.




இந்த நிகழ்வில், பெண் பக்தர்கள் 108 பேர், மங்கல மேள வாத்தியங்களுடன் பால்குடங்களை தாங்கி, ராஜவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மூலஸ்தான ஆலயத்துக்கு சென்றனர்.


பின்னர், மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மாலை நேரத்தில் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த பக்தி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு செய்திருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.