Type Here to Get Search Results !

காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் ஆலய ஆடித் திருவிழா வெற்றிகரமாக நிறைவு


 காஞ்சிபுரம், ஜூலை 19:


பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெருவில் அமைந்துள்ள பூஞ்சோலை கன்னியம்மன் கோயிலின் 46-வது ஆண்டு ஆடித் திருவிழா, வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நிறைவு பெற்றது.

விழாவின் தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது. முதலாம் நாளில் மூலவருக்கு அபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் தனலட்சுமி பூஜை போன்ற ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன.


விழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் சௌந்தர்யலஹரி பாராயணம் நிகழ்ந்தன.

மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை, அம்மன் பூங்கரகம் எடுத்து வரப்பட்டது. மாலை நேரத்தில் உற்சவர் மகாசண்டி தேவி அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.