Type Here to Get Search Results !

திருப்புட்குழி ஸ்ரீமணிகண்டீசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்



காஞ்சிபுரம், ஆக.29:


காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத மணிகண்டீசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க திரிபுரசுந்தரி சமேத மணிகண்டீசுவரர் கோயில்.கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயில் புதுப்பிக்கப்பட்டிருந்தது.


கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் டி.எம்.நாகராஜன்,டிஎம்டி.பாபு ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது.




விக்னேசுவர பூஜையுடன் தொடங்கி மகா கணபதி ஹோம், மகாலட்சுமி ஹோம், நவக்கிரக ஹோமம்ஆகியனவும் நடைபெற்றது.


தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை ஆகியனவும் நடைபெற்றது. 2வது நாளாக வெள்ளிக்கிழமை காலையில் யாத்ராதானம், பூரணாகுதி ஆகியன நிறைவு பெற்ற பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர்க்குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதன் தொடர்ச்சியாக மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை, அன்னதானம் ஆகியனவும் நடைபெற்றது.இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.


கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், கோயில் நாட்டாண்மைதாரர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,ஆலய நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார கிôம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.