Type Here to Get Search Results !

ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை – உலக நன்மைக்காக பெண்கள் பங்கேற்பு



காஞ்சிபுரம் ஜவகர்லால் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி காமாட்சி ஆதி பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். நவராத்திரி விழாவின் கடைசி நாளில்  , உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


காலை ஆரம்பத்தில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



சாரதா நவராத்திரி கொலு மண்டபத்தில், உற்சவர் காளிகாம்பாள், லட்சுமி, சரஸ்வதி மூவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். கோயில் அர்ச்சகர் சதீஷ்குருக்கள் தீபாராதனை தொடங்கிய உடன், பெண்கள் தீபமேற்றி விளக்கு பூஜையை தொடங்கினர்.


அர்ச்சகர்கள் லலிதா சகஹஸ்வர நாமங்கள் மற்றும் வேத மந்திரங்கள் கூறும் போது, குங்குமம் கொண்டு தீப பூஜை நிகழ்ந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் இணைந்து மேற்கொண்டனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.