Type Here to Get Search Results !

நவராத்திரி உற்சவத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் மாரியம்மன் காட்சியளித்தார்


ஸ்ரீதும்பவனத்து மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவத்தில் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.




காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 48வது வார்டு கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீதும்பவனத்து மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்து வருகிறார்.



மூன்றாம் நாளான இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து  ஸ்ரீதும்பவனத்து மாரியம்மன் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான ரூ1. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.200 புதிய ரூபாய் நோட்டுகளால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது



புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனைக்கான சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

📌  Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.