காஞ்சிபுரம், செப்.23:
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித்திருவிழா செப்.22 ஆம் தேதி திங்கள்கிழமை சண்டி ஹோமத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மறுநாள் செவ்வாய்க் கிழமை காலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலையில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
சிறப்பு தீபாராதனைகளும்,பின்னர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வயலின் வித்வான் ஆர்.குமரேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோயில் கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளாலும்,நவராத்திரி மண்டபம் முழுவதும் வண்ண மலர்கள் மற்றும் காய்கறிகளாலும் அலங்கரிக்கபட்டிருந்தது.
நவராத்திரி விழாவையொட்டி தினசரி காமாட்சி அம்மன் நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருள்வதும், தினசரி சூரசம்ஹாரமும், பக்தி இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலயத்தின் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி,கோயில் மணியக்காரர் சூரியநாரயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்