Type Here to Get Search Results !

கிளார் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் இன்று திருக்கல்யாணம்



காஞ்சிபுரம், அக்.25:

காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் அறம்வளர் நாயகிக்கும், அகத்தீஸ்வரருக்கும் மாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.



அகத்திய முனிவர் தங்கியிருந்து வழிபட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்.பழமையான இத்திருக்கோயிலின் 7 வது ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலையில் கோ.பூஜையும்,மகா அபிஷேகமும்,சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. 




இதன் தொடர்ச்சியாக பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


ஆலய வளாகத்தில் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அகத்தீஸ்வரருக்கும்,அறம்வளர் நாயகிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.பின்னர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. 



ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினர்,கிளார் கிராம பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி  பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡

  💛 புதிய தகவல் இதோ👆  

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.