Type Here to Get Search Results !

திதி, கரணம் பார்ப்பது நல்லதா? கெட்டதா?

ஜோதிட சாஸ்திரம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும் யோகிகளாலும் கொண்டு வரப்பட்ட   அற்புதமான பொக்கிஷம் என்று சொல்லலாம். 



ஜோதிடம் பழங்கானது என்று சொன்னாலும் அதை  கடந்து செல்ல முடியவில்லை... நல்ல நாள் பார்க்க பஞ்சாங்கம் உதவும்.  இதை ஜோதிடம் அறியாதவரும் பார்க்கலாம். நவக்கிரகங்களின் செயல்களுக்கு அன்றாட திதி வார, நட்சத்திர, யோக கரணங்களே ஆதாரம் என்பது குறிப்பிடதக்கது. 


திதி என்றால் என்ன?

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.


இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. 


அதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்


1.  பிரதமை - முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கல காரியங்கள் செய்ய உகந்த நாள்.

2. துவிதியை - இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மை தரும்.

3. திருதியை - கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.

4. சதுர்த்தி - நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்த்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.

5. பஞ்சமி - இது நாகதேவனின் நாள், விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.

6. சஷ்டி - நாளின் தெய்வம் முருகன். புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.

7. சப்தமி - சூரியனின் நாள். பிரயாணம் தொடங்குதல், பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்பந்தமான காரியங்கள் கைகூடும்.

8. அஷ்டமி - இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது

9. நவமி - அம்பிகையின் நாள். எதிரிகளை கொல்லுதல், வினாசம் செய்தல்.

10. தசமி - தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.

11. ஏகாதசி - மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியானித்தல் சிறப்பு.

12. துவாதசி - மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடைய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல்.

13. திரயோதசி - மன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்த்தல்.

14 .சதுர்த்தசி - காளியின் ஆதிக்கமுடைய நாள். விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல்.

15. அமாவாசை / பௌர்ணமி - அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும். பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.


எண்கிருஷ்ண பட்சம்சுக்கில பட்சம்தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1பிரதமைபிரதமைமுதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கல காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2துவிதியைதுவிதியைஇது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மை தரும்.
3திருதியைதிருதியைகெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.
4சதுர்த்திசதுர்த்திநான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்த்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5பஞ்சமிபஞ்சமிஇது நாகதேவனின் நாள், விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6சஷ்டிசஷ்டிநாளின் தெய்வம் முருகன். புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7சப்தமிசப்தமிசூரியனின் நாள். பிரயாணம் தொடங்குதல், பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்பந்தமான காரியங்கள் கைகூடும்.
8அஷ்டமிஅஷ்டமிஇன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது
9நவமிநவமிஅம்பிகையின் நாள். எதிரிகளை கொல்லுதல், வினாசம் செய்தல்.
10தசமிதசமிதர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11ஏகாதசிஏகாதசிமஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியானித்தல் சிறப்பு.
12துவாதசிதுவாதசிமஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடைய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல்.
13திரயோதசிதிரயோதசிமன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்த்தல்.
14சதுர்த்தசிசதுர்த்தசிகாளியின் ஆதிக்கமுடைய நாள். விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல்.
15அமாவாசைபௌர்ணமிஅமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும். பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.

நாட்காட்டியில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த திதி காலங்களில் நாம் சிலவற்றைச் செய்ய வேண்டும், சிலவற்றைத் தவிர்க்க வேண்டும். அது குறித்து பார்க்கலாம். 


வளர்பிறை திதி:

வளர்பிறை நாட்களில் (அமாவாசை) பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி தவிர மற்றவை  உத்தமம். 

அமாவாசை: அன்றைய நாளின் கரணங்களைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.


தேய்பிறை திதி:

பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை நாட்களில் துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, சதுர்தசி முதலியவை நல்ல நாட்கள். திருதியை முதல் ஸப்தமி வரையுள்ள தேய்பிறை நாட்கள் வளர்பிறை நாட்களுக்கு ஒப்பான நல்ல நாட்கள்.


கரணம்:  திதியில் பாதியளவு, கரணம் எனப்படும். 

‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது இந்தக் கரணங்களை தான் குறிக்கிறது.  இந்த கரணங்கள் மொத்தம் பதினொன்று. அவற்றின் குணங்கள் வேறுபடும்.


பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை - உத்தமம்.

வணிஜை, பத்திரை - மத்திமம்.

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் - அதமம்.


சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் ஆகிய நான்கு கரணங்களும் மிகவும் பொல்லாதவை. இந்த நான்கு கரணங்களில்  முக்கியமான காரியங்களையும் ஏன் எந்த காரியங்களையும்  செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனைய பவம் முதல் கரஜை வரையுள்ள ஐந்து கரணங்களும் நன்மை தரும். இவற்றில் நீங்கள் காரியங்கள் செய்யலாம்.


சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்துக்கினம் இவை நான்கும் பெரும்பாலும் அமாவாசையை ஓட்டியே வரும். அமாவாசைக்கு முதல் நாள் அல்லது அமாவாசையன்று அல்லது மறுநாள் என்று மாறி மாறி வரும். அதனால்தான் அமாவாசைக்கு முதல் நாள், அமாவாசை நாள் மற்றும் அதற்கு மறுநாள் எதையும் தவிர்ப்பது நல்லது என்று சொல்வது.


இன்றைய காலத்தில் அமாவாசை நிறைந்த நாள் என்று எல்லாவற்றையும் செய்கிறார்கள். அன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆசி கிட்டும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். இருந்தாலும், அமாவாசையன்று இந்த நான்கில் ஏதேனும் ஒரு கரணம் இருந்தால் அன்று செய்யக்கூடிய முக்கியமான நிகழ்வுகளைக் கூடுமானவரைக்கும் தவிர்த்து விடுவது உங்கள் காரியங்களில் தடை ஏற்படாமல் காக்கும்.


அமாவாசை சனிக்கிழமை அன்று வந்தால் நீங்கள் எல்லா காரியங்களையும் செய்யலாம்.  அன்று நல்ல காரியங்கள் நிலைத்து வளம் சேர்க்கும். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.