Type Here to Get Search Results !

காஞ்சி காமாட்சிக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை



படவிளக்கம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை


காஞ்சிபுரம், ஜூலை 16-

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவிழாக் காலங்களில் உற்சவத்தின் போது பயன்படுத்துவதற்காக சென்னையை சேர்ந்த தம்பதியர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினார்.


சென்னை நங்கநல்லூரை சேர்ந்த விஜயகுமார்}நீரஜா தம்பதியர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரிடம் வழங்கினார்.


முன்னதாக அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வைத்து வழிபாடு செய்தார். 



இது குறித்து கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் கூறுகையில் இக்குடையானது திருவிழாக்காலங்களில் உற்சவர் காமாட்சி அம்பிகைக்கும்,தேர்த்திருவிழா நடைபெறும் நாட்களிலும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.