காஞ்சிபுரம், செப்.5:
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள கன்னிமூல கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கன்னிமூல கணபதி கோயில் அமைந்துள்ளது.சிதிலமடைந்திருந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத் தையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது .இதனையொட்டி 2வது நாளாக யாகசாலையில் பூரணாகுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனிதநீர்க் கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மூலவர் கன்னிமூல கணபதிக்கு சிவாச்சாரியார்களால் கலசாபிஷேகமும்,சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.