Type Here to Get Search Results !

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்பாள் மாசிமக பிரம்மோத்ஸவம் – பதினொன்றாம் நாள் சிறப்பு நிகழ்வு




காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்பாளின் மாசிமக பிரம்மோத்ஸவத்தின் பதினொன்றாம் நாள் திருவிழா, 13.03.2025 (வியாழக்கிழமை) இரவு சிறப்பாக நடைபெற்றது. இந்த நாளில், தங்க காமகோடி விமானத்தில் மூலவராக திருவிராட்டில் எழுந்தருளிய ஸ்ரீ அம்பாள் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.


இந்த புண்ணிய நிகழ்வில், காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி பெரியவா அவர்களின் புண்ணிய அருளாசியும் கிடைத்தது.


அன்னதான வைபவம் ஸ்ரீ சங்கரமடம் முன்பாக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா காஞ்சி குமரகோட்ட குருக்கள் காமேஸ்வரன் குருக்கள் ஜி அவர்களால் துவக்கப்பட்டது.



அன்னதான உதவியை மாநில விவசாய சங்க தலைவர், இலவச பயிற்சி நிறுவன தலைவர், இயற்கை விவசாயி மற்றும் காஞ்சி காமாட்சி சங்கர மடம் வரவேற்பு குழு ஆலோசகர் திரு. K. எழிலன் ஜி மேற்கொண்டார்.



இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த காஞ்சி காமாட்சி சங்கர மடம் வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் திரு. V. ஜீவானந்தம் மற்றும் அவரது குழுவினர், மாநகர வரவேற்பு குழு பொறுப்பாளர் திரு. ராஜேஷ் ஜெயின் ஜி, சமூக ஆர்வலர்கள் வரலஷ்மி ஜி, கோட்டிஸ்வரன், கேசவன், யுவராஜ், ஆறுமுகம், தியாகு, ஜெயசித்ரா, அறிவுடைய நம்பி, ஹரிஹரன் ஆகியோர் தொண்டு பணியில் ஈடுபட்டனர்.

இந்த புண்ணிய நிகழ்வு பக்தர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் ஆன்மீக திருப்தியையும் ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.