Type Here to Get Search Results !

பெரியகாஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 3வது நாள் சிறப்பு அலங்காரம்


 பெரியகாஞ்சிபுரம் :

பெரியகாஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோயிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின் மூன்றாவது நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை, வள்ளி, தெய்வானை சமேதராக சண்முகப்பெருமான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.




காலை வேளையில் கோயில் துவஜாரோஹணத்திற்கு பின் நடைபெற்ற ஸ்நாபன தீபாராதனை, அபிஷேகம், பூஜை ஆகியவற்றில் பலர் கலந்து கொண்டனர். 






மாலை நேரத்தில், மலர்கள் மற்றும் தங்க வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருவுருக்கள் பக்தர்களை மெய்மறக்க செய்தன.


கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் விசேஷ பூஜை, வேதபாராயணம், தேவாரம் பாடல்கள் நடைபெற்று வருகின்றன. இதை காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள்பெற்று வருகின்றனர்.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.