Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் சங்கடஹர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்


காஞ்சிபுரம், அக்.3:

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள கார் வண்ணப் பெருமாள் கோயில் வளாகத்தில் புதியதாக சங்கடஹர ஆஞ்சநேயருக்கென தனியாக சந்நிதி நடைபெற்று வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.




காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் கார்வண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் சங்கடஹர ஆஞ்சநேயருக்கென புதியதாக சந்நிதி கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த செப்.29 ஆம் தேதி தொடங்கியது.வெள்ளிக்கிழமை கோ.பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று வேதவிற்பன்னர்களால் ஆஞ்சநேயருக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SIRIL Sequence Embroidery
SIRIL Sequence Embroidery (Beige)
Unstitched piece — click to view on Amazon
Buy

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.