விருத்தாசலம் :
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் என அழைக்கப்படும் அருள்மிகு விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருதகிரிஸ்வரர் ஆலயத்தின் முன்பாக, விருத்தாசலம் செங்குந்த முதலியார் சங்கம் சார்பில், அருள்மிகு முருக பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சூரபத்மன் யானை முகம், சிங்க முகம், சேவல் மற்றும் பல்வேறு வடிவங்களில் தோன்ற, முருக பெருமான் பல அறிவுரைகள் வழங்கியும் சூரபத்மன் அடங்காத நிலையில், அவரது அகந்தையையும் ஆணவத்தையும் அடக்கும் விதமாக பல்வேறு தோற்றங்களில் தோன்றி சூரனை வீழ்த்தினார்.
“அன்பும் அறனும் ஒருவரை வாழ வைக்கும், ஒற்றுமையோடு இருப்பதே வாழ்வின் தத்துவம்” என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்த சூரசம்காரம் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சண்டை நிகழ்ச்சியும், சூரனை வீழ்த்திய பின் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மயில் வாகனத்தில் முருக பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.png)