Type Here to Get Search Results !

காஞ்சிபுரத்தில் கிருபானந்தவாரியார் சுவாமிகள் குருபூஜை விழா


காஞ்சிபுரம், நவ.13:

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருவேகம்பன் தெருவில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெற்றது.


விழாவையொட்டி காலையில் முருகப் பெருமானுக்கும்,வாரியார் சுவாமிகளின் உருவச்சிலைக்கும் சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது.பின்னர் தெய்வத்திருமுறை இசையும்,முருகப்பெருமான் மற்றும் வாரியார் சுவாமிகளின் பக்திப் பாடல்களும் பாடப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான வாரியார் சுவாமிகள் விருது கோயம்புத்தூர் பேராசிரியர் திலகவதி சண்முக சுந்தரத்துக்கு மகாபாரத சொற்பொழிவாளர் முத்து கணேசன் வழங்கினார்.


அருணகிரிநாதரின் திருப்புகழும், வாரியார் சுவாமிகளும் என்ற தலைப்பில் விருதாளர் திலகவதி சண்முகசுந்தரம் பேசினார்.


தொடர்ச்சியாக புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.


நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் குருபூஜை அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.