Type Here to Get Search Results !

காஞ்சியில் ஆருத்ரா தரிசன வைபவம்: ராஜவீதிகளில் உலா வந்த நடராஜர் - சிவகாமி அம்மன்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம்!


 காஞ்சிபுரம் | ஜனவரி 3, 2026

மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஆருத்ரா மகோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றது.


கச்சபேசுவரர் கோயில் ஆருத்ரா தரிசனம்: 

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயிலில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை மூலவருக்குச் சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மனும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.


சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு: 

இதேபோல் காஞ்சிபுரத்தின் முக்கிய ஆலயங்களான:

  • திருக்காலிமேடு சத்யநாதசுவாமி கோயில்
  • வரலாற்றுச் சிறப்புமிக்க கைலாசநாதர் கோயில்
  • முத்தீஸ்வரர், புண்ணியகோடீஸ்வரர் மற்றும் மணிகண்டீசுவரர் கோயில்கள்

ஆகியவற்றிலும் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனைக்குப் பிறகு நடராஜரும் சிவகாமி அம்மனும் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.



அங்காள பரமேசுவரி அம்மன் உலா: 

பெரியகாஞ்சிபுரம் அங்காள பரமேசுவரி அம்மன் ஆலயத்தில், ஆருத்ரா விழாவை ஒட்டி அம்மன் மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளினார். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் ராஜவீதிகளில் வீதியுலா வந்ததைக் கண்ட பக்தர்கள் "ஓம் சக்தி" கோஷங்களுடன் தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.