Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் நாகாத்தம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா


காஞ்சிபுரம், செப்.4:


சின்னக்காஞ்சிபுரம் வேகவதி தெருவில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை கூழ்வார்த்தல் விழாவையொட்டி பாலவிநாயகர்,பாலமுருகன் ஆகியோருடன் உற்சவர் நாகாத்தம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!


சின்னக்காஞ்சிபுரம் கல்லுக்குளம் பகுதி வேகவதி தெருவில் அமைந்துள்ளது நாகாத்தம்மன் கோயில். இக்கோயில் கூழ்வார்த்தல் விழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றது.


இதனையடுத்து கூழ்வார்த்தல்,ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.


மாலையில் பாலவநாயகர்,பாலமுருகன் ஆகியோருடன் உற்சவர் நாகாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்தவாறு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை வேகவதி தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.